Saturday, 10 September 2011

காத்திருக்கிறேன் நண்பா !!



கல்லூரியின் வாயிலும், வகுப்பறை வெளிகளும் 
காத்திருக்கின்றன   நம் வருகைக்காய் !! 
விடுதி அறைகளின் சுவர்கள்   காத்திருக்கின்றன 
நம சண்டையிட்ட  தருணங்களுடன்
நீண்ட இரவுகளும் , நிசப்தமும் காத்திருக்கின்றன 
நம் அரட்டைகளுக்காய்  !!1
மலைக்கோட்டையில்   மோதிச்சென்றிடும் காற்று
 நம் முகவரி கேட்டுக்   காத்திருக்கிறது !! 
கல்லூரி கலையரங்கின் மூடிய கதவுகள்,  
காத்திருக்கின்றன நம் பாதச் சுவடுகளுக்காய்  !!    
தொலை தூர பயணங்களும் , காய்ச்சல் தருணங்களும்    
காத்திருக்கின்றன உன் அருகாமைக்காய் !!!

மாலை நேர தேநீர்  தருணங்கள்
 காத்திருக்கின்றன நம் பகிர்வுகளுக்காய் !!!
அரசு மருத்துவமனையின் கிணற்றடிமேடையும், குட்டிசுவரும் 
காத்திருக்கின்றன நாம் பேச மறந்த விஷயங்கள
குளிபதன உணவகங்களும் , திரையரங்கின்  இருளும் 
காத்திருக்கின்றன நம் பிறந்தநாள்  கொண்டாட்டங்களுக்காய் !!!! 
தெப்பக்குள கடைகளும் , பொருட்காட்சி சாலைகளும் 
காத்திருக்கின்றன நாம் வாங்க முடியா பொருட்களுடன் !!!
கவிதைகள் என்பதான என் கிறுக்கல்கள் 
காத்திருக்கின்றன உன் வாசிப்பிற்காய் !!!!     

முடிவிலாத இரவுகள்
காத்திருக்கின்றன  நம் தேர்வுகால வாசிப்புகளுக்காய் !!!
உணவு மறந்த மருத்துவமனை  நேரங்களும் ,உயிர் வரை நன்றி சொல்லும் நோயாளிகளும்
காத்திருக்கிறார்கள் நம் சேவைகளுக்காய் 

நானும் காத்திருக்கிறேன் நண்பா !!!
கொஞ்சம்  தேநீர் மற்றும்   
நிறைய  வார்த்தைகளுடன் !!!

No comments:

Post a Comment